• Sat. Jul 27th, 2024

வரலாற்றில் இன்று செப்டம்பர் 18 – நெதர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது

Sep 18, 2021

செப்டம்பர் 18 கிரிகோரியன் ஆண்டின் 261 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 262 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 104 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

96 – உரோமைப் பேரரசர் தொமீசியன் கொல்லப்பட்டதை அடுத்து நேர்வா பேரரசராக முடிசூடினார்.

1180 – பிலிப்பு ஆகுஸ்தசு பிரான்சின் மன்னராக முடி சூடினார்.

1679 – மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றத்தில் இருந்து நியூ ஆம்ப்சயர் தனியாகப் பிரிக்கப்பட்டது.

1739 – பெல்கிரேட் நகரம் உதுமானியப் பேரரசிடம் கையளிக்கப்பட்டது.

1759 – ஏழாண்டுப் போர்: கியூபெக் நகரை பிரித்தானியா பிரான்சிடம் இருந்து கைப்பற்றியது.

1810 – சிலியில் முதலாவது அரசு அமைக்கப்பட்டது.

1812 – மாஸ்கோவில் பரவிய தீ நகரின் முக்கால் பகுதியை அழித்துவிட்டு அணைந்தது. பெத்ரோவ்ஸ்கி அரண்மனையில் இருந்து நெப்போலியன் கிரெம்ளினுக்கு வந்தான்.

1851 – த நியூயார்க் டைம்ஸ் முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.

1872 – இரண்டாம் ஒஸ்கார் சுவீடன்–நோர்வேயின் மன்னராக முடி சூடினார்.

1906 – ஆங்காங்கில் ஏற்பட்ட புயல் மற்றும் ஆழிப்பேரலையினால் 10,000 பேர் உயிரிழந்தனர்.

1911 – உருசியப் பிரதமர் பியோத்தர் ஸ்டோலிப்பின் கீவ் ஒப்பேரா மாளிகையில் சுடப்பட்டார்.

1919 – நெதர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1922 – உலக நாடுகள் அணியில் அங்கேரி இணைந்தது.

1924 – மகாத்மா காந்தி இந்து-முசுலிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணாநோன்பைத் தொடங்கினார்.

1934 – உலக நாடுகள் அணியில் சோவியத் ஒன்றியம் இணைந்தது.

1939 – இரண்டாம் உலகப் போர்: இக்னாசி மொஸ்சிக்கியின் தலைமையிலான போலந்து அரசு உருமேனியாவுக்கு தப்பி ஓடியது.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியக் கப்பல் வாரணாசி நகரம் நாட்சி ஜெர்மனியின் நீர்மூழ்கியினால் தாக்கப்பட்டு மூழ்கியதில் 77 குழந்தைகள் உட்படப் பல அகதிகள் உயிரிழந்தனர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் சோபிபோர் என்ற இடத்தில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: டென்மார்க் யூதர்களை வெளியேற இட்லர் உத்தரவிட்டார்.

1944 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சப்பானின் ஜூனியோ மாரு என்ற கப்பலைத் தாக்கியதில் போர்க்கைதிகள், மற்றும் அடிமைகள் உட்பட 5,600 பேர் கொல்லப்பட்டனர்.

1948 – ஐதராபாத் இராணுவம் சரணடைய ஒப்புக்கொண்டதை போலோ நடவடிக்கையை இந்தியா கைவிட்டது.

1959 – வன்கார்ட் 3 விண்கலம் பூமியைச் சுற்றிவர அனுப்பப்பட்டது.

1960 – பிடல் காஸ்ட்ரோ ஐநா கூட்டத்தொடரில் பங்குபற்ற நியூயோர்க் நகரை அடைந்தார்.

1961 – ஐநாவின் பொதுச்செயலர் டாக் ஹமாஷெல்ட் காங்கோவில் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்றபோது விமான விபத்தில் உயிரிழந்தார்.

1962 – புருண்டி, ஜமேக்கா, ருவாண்டா, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.

1972 – இடி அமீனினால் விரட்டப்பட்ட முதல் தொகுதி உகாண்டா மக்கள் ஐக்கிய இராச்சியத்தை வந்தடைந்தனர்.

1973 – பகாமாசு, கிழக்கு செருமனி, மேற்கு செருமனி ஆகியன ஐநாவில் இணைந்தன.

1974 – சூறாவளி ஃபீஃபி ஒந்துராசைத் தாக்கியதில் 5,000 பேர் உயிரிழந்தனர்.

1976 – பெய்ஜிங் நகரில் மா சே துங்கின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.

1977 – வொயேஜர் 1 விண்கலம் பூமியையும் சந்திரனையும் சேர்த்துப் படம் எடுத்தது.

1980 – சோயுஸ் 38 கியூபாவைச் சேர்ந்த விண்வெளி வீரருடனும் ஒரு உருசியருடனும் விண்வெளி சென்றது.

1981 – பிரான்சில் மரணதண்டனையை நீக்கும் தீர்மானத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் வாக்களித்தது.

1982 – லெபனானில் கிறிஸ்தவ துணை இராணுவத்தினர் 600 பாலஸ்தீனரைக் கொன்றனர்.

1988 – பர்மாவில் அரசியலமைப்பு நிறுத்திவைக்கப்பட்டது. மக்களாட்சிக்கு ஆதரவானோர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். 8888 எழுச்சி முடிவுக்கு வந்தது.

1990 – லீக்கின்ஸ்டைன் ஐநாவில் இணைந்தது.

1997 – அமெரிக்க ஊடகத் தொழிலதிபர் டெட் டேர்னர் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு $1 பில்லியன் பணத்தை அன்பளிப்பாக வழங்கினார்.

1999 – கிழக்கிலங்கை, அம்பாறையில் உகனை, மகா ஓயா எல்லைக் கிராமங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 52 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2006 – கிழக்கிலங்கை, அம்பாறையில் 11 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

2007 – மியான்மரில் பௌத்த பிக்குகள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.

2011 – 2011 சிக்கிம் நிலநடுக்கம் வடகிழக்கு இந்தியா, நேபாளம், பூட்டான், வங்காளதேசம், தெற்கு திபெத்து ஆகிய பகுதிகளில் உணரப்பட்டது.

2014 – ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிவதற்கான பொது வாக்கெடுப்பில் 55.3% இசுக்கொட்லாந்து மக்கள் விடுதலைக்கு எதிராக வாக்களித்தனர்.

2016 – இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் யூரி என்ற நகரில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலில், 19 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.