• Tue. Mar 26th, 2024

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 12

Aug 12, 2021

ஆகத்து 12 கிரிகோரியன் ஆண்டின் 224 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 225 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 141 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 30 – மார்க் அந்தோனி போரில் தோல்வியடைந்ததை அடுத்து எகிப்தின் கிளியோபாத்ரா தற்கொலை செய்து கொண்டாள்.

1099 – முதலாம் சிலுவைப் போர்: சிலுவைப் போர்வீரர்கள் பாத்திமக் கலிபகத்தைத் தோற்கடித்தனர்.

1121 – ஜோர்ஜிய இராணுவத்தினர் நான்காம் டேவிட் மன்னர் தலைமையில் செல்யூக்குகளை வென்றனர்.

1323 – சுவீடனுக்கும் நோவ்கோரத் குடியரசுக்கும் இடையில் எல்லை தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது./

1492 – கிறித்தோபர் கொலம்பசு புதிய உலகத்திற்கான தனது முதல் பயணத்தின் போது கேனரி தீவுகள் வந்தடைந்தார்.

1499 – வெனிசியர்களுக்கும் உதுமானியர்யர்களுக்கும் இடையில் முதற் போர் இடம்பெற்றது.

1765 – இந்தியத் துணைக்கண்டத்தில் கம்பனி ஆட்சியைக் காலூன்ற வழி வகுக்கப்பட்ட அலகாபாத் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1812 – இலங்கையில் பாப்திச சபை நிறுவப்பட்டது.

1812 – கொழும்பு நூலகம் அமைக்கப்பட்டது.

1851 – ஐசாக் சிங்கர் தனது தையல் இயந்திரத்துக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1865 – பிரித்தானிய மருத்துவர் ஜோசப் லிஸ்டர் தனது முதலாவது நோய்நுண்மத் தடுப்பு முறை அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.

1914 – முதலாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் ஆத்திரியா-அங்கேரி மீது போர் தொடுத்தது.

1944 – நாட்சி செருமனிப் படைகள் போலந்தில் வோலா என்ற இடத்தில் நடத்திய படுகொலைகள் முடிவுக்கு வந்தன. 40,000 பேர் கொல்லப்பட்டனர்.

1950 – கொரியப் போர்: அமெரிக்க போர்க்கைதிகள் 75 பேர் வடகொரிய இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.

1952 – மாஸ்கோவில் 13 யூத இன அறிவியலாளர்கள், கவிஞர்கள் கொல்லப்பட்டனர்.

1953 – கிரேக்கத்தில் இயோனியத் தீவுகளில் 7.2 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 445 முதல் 800 பேர் வரை உயிரிழந்தனர்.

1953 – சோவியத் ஒன்றியம் ஜோ 4 என்ற தனது முதலாவது ஐதரசன் குண்டு சோதனையை நடத்தியது.

1960 – எக்கோ I என்ற நாசாவின் முதலாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

1964 – இனவெறிக் கொள்கை காரணமாக தென்னாபிரிக்கா ஒலிம்பிக்கில் விளையாடத் தடை செய்யப்பட்டது.

1976 – லெபனான் உள்நாட்டுப் போர்: தெல் அல்-சாத்தார் என்ற இடத்தில் 1,000 முதல் 3,500 வரையான பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

1977 – இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்குள் தமிழர்கள் மீது இனப்படுகொலைகள் நடத்தப்பட்டதில் 300 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1981 – ஐபிஎம் தனி மேசைக் கணினி வெளியிடப்பட்டது.

1985 – சப்பானில் விமானம் ஒன்று ஒசுத்தாக்கா மலையில் மோதியதில் 520 பேர் உயிரிழந்தனர்.

1985 – ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் 2ம் கட்ட திம்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.

1990 – அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் மிகப்பெரியதும், முழுமையானதுமான டைரனொசோரசு என்னும் டைனசோரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.

1990 – வீரமுனைப் படுகொலைகள், 1990: அம்பாறை, வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

2000 – கூர்ஸ்க் என்ற உருசியக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியின் போது 118 பேருடன் பாரெண்ட்சு கடலில் மூழ்கியது.

2005 – இலங்கைவின் வெளிவிவகார அமைச்சர் லக்சுமன் கதிர்காமர் கொழும்பில் அவரது வீட்டில், நீச்சல் தடாகத்தில் நீராடும் போது சுடப்பட்டு அடுத்த நாள் இறந்தார்.

2005 – மாலை தீவுகளில் அரசுக்கெதிராக கிளர்ச்சி இடம்பெற்றது.

2005 – இலங்கையின் தமிழ் வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா கொலை செய்யப்பட்டார்.

2006 – இலங்கைத் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் கேதீஸ் லோகநாதன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2015 – சீனாவில் தியான்ஜின் மாகாணத்தில் நிகழ்ந்த இரண்டு பெரும் குண்டுவெடிப்புகளில் 173 பேர் உயிரிழந்தனர், 800 பேர் காயமடைந்தனர்.