• Sat. Jul 27th, 2024

வரலாற்றில் இன்று ஜூலை 12

Jul 12, 2021

சூலை 12 கிரிகோரியன் ஆண்டின் 193 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 194 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 172 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

70 – ஆறு மாத முற்றுகையின் பின்னர் டைட்டசின் படையினர் எருசலேமின் சுவர்களைத் தாக்கினர். மூன்று நாட்களின் பின்னர் சுவர்களைத் தகர்த்ததை அடுத்து, இரண்டாம் கோவிலை அவரகளால் அழிக்க முடிந்தது.

1191 – மூன்றாவது சிலுவைப் போர்: சலாகுத்தீனின் படையினர் பிரான்சின் இரண்டாம் பிலிப்பிடம் சரணடைந்தனர். பாலத்தீனத்தின் அக்கோ நகர் மீதான 2 ஆண்டுகள் முற்றுகை முடிவுக்கு வந்தது.

1543 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் கேத்தரீன் பார் என்ற தனது 6-வதும், கடைசியுமான மனைவியைத் திருமணம் புரிந்தார்.

1561 – மாஸ்கோவின் புனித பசில் பேராலயம் திருமுழுக்குப் பெற்றது.

1562 – கத்தோலிக்க ஆயர் தியேகோ டெ லாண்டா மாயாக்களின் பழம்பெரும் நூல்களைத் தீக்கிரையாக்கினார்.

1576 – ராஜ்மகால் போரில் வங்காள சுல்தானகத்தை வென்றதை அடுத்து, முகலாயப் பேரரசு வங்காளத்தைக் கைப்பற்றி இணைத்தது.

1641 – போர்த்துக்கல்லுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

1691 – இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியமின் இராணுவம் அயர்லாந்தில் ஓகிறிம் என்ற இடத்தில் பெரும் வெற்றி பெற்றது.

1776 – கப்டன் ஜேம்ஸ் குக் தனது மூன்றாவது கடற் பயணத்தை ஆரம்பித்தார்.

1799 – ரஞ்சித் சிங் லாகூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பஞ்சாபின் (சீக்கியப் பேரரசு) ஆட்சியைப் பிடித்தார்.

1806 – 16 செருமானிய மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவின.

1898 – செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

1913 – செர்பியப் படையினர் பல்கேரியாவின் விதின் நகரை முற்றுகையிட்டனர்.

1918 – சப்பானின் “கவாச்சி” என்ற போர்க்கப்பல் ஒன்சூவில் மூழ்கடிக்கப்பட்டதில் 621 பேர் உயிரிந்தனர்.

1920 – சோவியத்-லித்துவேனிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. லித்துவேனியாவை சோவியத் ஒன்றியம் தனிநாடாக அங்கீகரித்தது.

1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனிய, சோவியத் படைகள் புரொகோரொவ்கா என்ற இடத்தில் பெரும் சண்டையில் ஈடுபட்டன.

1948 – இசுரேலியப் பிரதமர் டேவிட் பென்-குரியன் லோட், இரம்லா நகர்களில் இருந்து பாலத்தீனியர்களை வெளியேற உத்தரவிட்டார்.

1961 – கடக்வாசுலா, பான்செத் அணைகளில் ஏற்பட்ட பழுதின் காரணமாக புனேயில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தில் மூழ்கி 2,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1967 – அமெரிக்காவின் நுவார்க் நகரில் பெரும் இனக்கலவரம் வெடித்தது. 26 பேர் உயிரிழந்தனர், 700 பேர் காயமடைந்தனர்.

1971 – ஆத்திரேலியாவில் பழங்குடியினரின் கொடி முதன் முறையாகப் பறக்கவிடப்பட்டது.

1975 – சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.

1979 – கிரிபட்டி பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1993 – சப்பானில் 7.8 அளவு நிலநடுக்கம், மற்றும் சுனாமி தாக்கியதில் 202 பேர் உயிரிழந்தனர்.

2006 – இஸ்ரேலிய இராணுவத்தினர் இருவரை ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடத்தினர். இதனை அடுத்து இஸ்ரேல் லெபனான் மீது தாக்கியதில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். லெபனான்-இசுரேலியப் போர் ஆரம்பமானது. போர் ஆகஸ்ட் 14 இல் முடிவுக்கு வந்தது.

2007 – அமெரிக்க இராணுவத்தின் அப்பாச்சி உலங்குவானூர்திகள் பகுதாது மீது வான் தாக்குதலை நடத்தின.

2007 – வவுனியாவில் இலங்கை வான்படையின் கிபீர் வானூர்தியை விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தினர்.

2012 – சிரிய உள்நாட்டுப் போர்: சிரியாவில் துராய்மீசா கிராமத்தில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையில் 150 பேர் வரை கொல்லப்பட்டனர்.[2]

2012 – நைஜீரியாவில் ஒக்கோபி நகரில் எண்ணெய் சுமையுந்து ஒன்று வெடித்ததில் 100 பேர் வரை உயிரிழந்தனர்.