• Thu. Mar 28th, 2024

வரலாற்றில் இன்று ஜூலை 13

Jul 13, 2021

சூலை 13 கிரிகோரியன் ஆண்டின் 194 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 195 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 171 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 587 – சாலமோனின் கோவில் இடிக்கப்பட்டதை அடுத்து, பாபிலோனின் எருசலேம் முற்றுகை முடிவுக்கு வந்தது.

1174 – 1173-74 கிளர்ச்சியின் முக்கிய கிளர்ச்சியாளர் இசுக்காட்லாந்தின் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் இரண்டாம் என்றியின் படையினரால் கைது செய்யப்பட்டார்.

1249 – இசுக்கொட்லாந்தின் மன்னராக மூன்றாம் அலெக்சாந்தர் முடிசூடினார்.

1643 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்தில் என்றி வில்மட் பிரபுவின் முடியாட்சி சார்புப் படைகள் சேர் வில்லியம் வோலர் தலைமையிலான நாடாளுமன்ற சார்புப் படைகளைத் தோற்கடித்தனர்.

1830 – வங்காள மறுமலர்ச்சிக்கு வித்திட்ட இசுக்கொட்டிசு சர்ச் கல்லூரி கொல்கத்தாவில் அலெக்சாண்டர் டஃப், இராசாராம் மோகன் ராய் ஆகியோரால் நிறுவப்பட்டது.

1844 – இலங்கையில் காவற்துறை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.

1863 – நியூயார்க் நகரத்தில் அரசுக்கு எதிரான மூன்று நாள் கலவரங்கள் ஆரம்பமாயின. 120 பேர் கொல்லப்பட்டனர்.

1869 – இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்.

1878 – பெர்லின் உடன்பாட்டை அடுத்து ஐரோப்பிய நாடுகள் பால்கன் குடாவின் வரைபடத்தை மாற்றியமைத்தன. செர்பியா, மொண்டெனேகுரோ, உருமேனியா ஆகியன முழுமையாக உதுமானியப் பேரரசிடம் இருந்து விடுதலை அடைந்தன.

1919 – பிரித்தானியாவின் வான்கப்பல் ஆர்34 அத்திலாந்திக்குப் பெருங்கடல் மேலாக 182 மணிநேரம் பறந்து தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்தின் நோர்போக்கில் தரையிறங்கியது.

1923 – லாஸ் ஏஞ்சலீசில் ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் “ஹாலிவுட் குறியீடு” அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இது “ஹாலிவுட்லாந்து” என எழுதப்பட்டாலும் பின்னர் 1949 இல் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.

1930 – முதலாவது உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் உருகுவையில் ஆரம்பமாயின. லூசியென் லோரென்ட் பிரான்சுக்காக மெக்சிகோவுக்கு எதிராக முதலாவது கோலைப் போட்டார்.

1931 – காஷ்மீர், ஸ்ரீநகரில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 75 பேர் கொல்லப்பட்டனர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: மொண்டெனேகுரோ மக்கள் அச்சு நாடுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.

1971 – மொரோக்கோவில் தோல்வியடைந்த இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட பத்து இராணுவத்தினர் தூக்கிலிடப்பட்டனர்.

1977 – சோமாலியா எத்தியோப்பியா மீது போரை ஆரம்பித்தது.

1977 – மின்சார இழப்பினால் நியூயார்க் நகரம் 25 மணி நேரம் இருளில் மூழ்கியதில் பல கொள்ளைச் சம்பவங்களும் பல்வேறு சமூக விரோத நிகழ்வுகளும் இடம்பெற்றன.

1989 – இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் அ. அமிர்தலிங்கம், வெ. யோகேசுவரன் ஆகியோர் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1997 – சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபாவுக்குக் கொண்டுவரப்பட்டன.

2001 – சீனாவின் பெய்ஜிங் நகரம் 2008க்கான ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குத் தகுதி பெற்றது.

2005 – பாக்கித்தானில் கோட்கி என்ற இடத்தில் மூன்று தொடருந்துகள் மோதியதில் 150 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.

2011 – மும்பை நகரில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 26 பேர் கொல்லப்பட்டு, 130 பேர் காயமடைந்தனர்.

2011 – தெற்கு சூடான் ஐக்கிய நாடுகளில் இணைந்தது.

2016 – ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கேமரன் தனது பதவியைத் துறந்தார். தெரசா மே புதிய பிரதமரானார்.