• Thu. Apr 18th, 2024

வரலாற்றில் இன்று ஜூன் 10

Jun 10, 2021

சூன் 10 கிரிகோரியன் ஆண்டின் 161 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 162 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 204 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

671 – சப்பான் பேரரசர் தெஞ்சி ரொக்கூக்கு என அழைக்கப்படும் நீர்க்கடிகாரத்தை அறிமுகப்படுத்தினார்.

1190 – மூன்றாவது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் முதலாம் பிரெடெரிக் எருசலேம் நகரை நோக்கிய படையெடுப்பின் போது சாலி ஆற்றில் மூழ்கி இறந்தார்.

1329 – பெலிக்கானோன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பைசாந்தியர்கள் உதுமானியப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர்.

1523 – டென்மார்க்கின் முடிக்குரிய மன்னராகத் தன்னை அங்கீகரிக்கத் தவறியதால், கோபனாவன் நகரை முதலாம் பிரெடெரிக்கின் படைகள் சுற்றி வளைத்தன.

1782 – சியாமின் மன்னராக முதலாம் இராமா முடி சூடினார்.

1786 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக டாடு ஆற்றின் அணைப்பு உடைந்ததில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 100,000 பேர் உயிரிழந்தனர்.

1793 – பிரெஞ்சுப் புரட்சி: கிரோந்தின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, யாக்கோபியர் பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழுவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து புரட்சிகர சர்வாதிகார ஆட்சியை நிறுவினர்.

1801 – சிவகங்கையின் சின்னமருது ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை உதறித்தள்ளி சுதேசி மன்னர்களின் கீழ் ஜம்புத்தீவின் மக்கள் வாழவேண்டும் என்ற தனது விடுதலைப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டார்.

1829 – இலண்டன் தேம்சு ஆற்றில் முதலாவது படகோட்டப் போட்டி ஆக்சுபோர்டு, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் இடம்பெற்றது.

1838 – நியூ சவுத் வேல்சில் (இன்றைய ஆத்திரேலியாவில்) இன்வெரெல் என்ற இடத்தில் 28 ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆங்கிலேயக் குடியேறிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜீனியாவில் அமெரிக்கக் கூட்டமைப்புப் படைகள் ஒன்றியப் படைகளைத் தோற்கடித்தன.

1868 – செர்பியாவின் இளவரசர் மூன்றாம் மிகைலோ ஒப்ரெனோவிச் படுகொலை செய்யப்பட்டார்.

1871 – கொரியாவின் கங்குவா தீவில் 109 அமெரிக்கக் கடற்படையினர் மெக்லேன் டில்ட்டன் தலைமையில் தாக்குதல் நடத்தினர்.

1886 – நியூசிலாந்தில் டரவேரா எரிமலை வெடித்ததில் 153 பேர் உயிரிழந்தனர்.

1898 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கக் கடற்படையினர் கியூபா தீவில் தரையிறங்கினர்.

1916 – உதுமானியப் பேரரசுக்கு எதிராக அரபுக் கிளர்ச்சி ஆரம்பமானது.

1918 – ஆஸ்திரிய-அங்கேரியப் போர்க்கப்பல் சென்ட் குரோவாசியக் கரைக்கப்பால் இத்தாலிய படகு ஒன்றினால் தாக்கப்பட்டதில் மூழ்கியது. இந்நிகழ்வு அருகில் நின்ற மற்றுமொரு படகில் இருந்து படம் பிடிக்கப்பட்டது.

1935 – 1932 முதல் போரில் ஈடுபட்டு வந்த பொலிவியாவும் பரகுவையும் போரை நிறுத்த உடன்பட்டன.

1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரான்சு மீதும் ஐக்கிய இராச்சியம் மீதும் போரை அறிவித்தது.

1940 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியப் படையிடம் நோர்வே வீழ்ந்தது.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு எதிராக இத்தாலி போரை அறிவித்தது.

1942 – இரண்டாம் உலகப் போர்: நாட்சிகள் செக் குடியரசின் லிடிச் கிராமத்தை எரித்தனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் ஒரேடூர்-சர்-கிளேன் என்ற இடத்தில் 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: கிரேக்கத்தில் டிஸ்டோமோ என்ற இடத்தில் 218 பொதுமக்கள் செருமனியர்களினால் கொல்லப்பட்டனர்.

1945 – ஆத்திரேலியப் படைகள் புரூணையை விடுவிப்பதற்காக அங்கு தரையிறங்கினர்.

1956 – இலங்கை இனப்பிரச்சினை: இலங்கையில் அம்பாறையில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1957 – கனடாவில் 22 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த லிபரல் கட்சி அரசு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தது.

1967 – இசுரேலும் சிரியாவும் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததில் ஆறு நாள் போர் முடிவுக்கு வந்தது.

1982 – சிரிய அரபு இராணுவம் லெபமானில் இசுரேலியப் படையினரை தோற்கடித்தனர்.

1984 – தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு சிறையை உடைத்து அரசியல் கைதியாக இருந்த நிர்மலா நித்தியானந்தனை விடுவித்தனர்.

1986 – மண்டைதீவுக் கடல் படுகொலைகள்: யாழ்ப்பாணம், மண்டை தீவில் குருநகரைச் சேர்ந்த 31 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1990 – இலங்கை இராணுவத்துக்கு எதிரான விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தது.

1991 – 11-வயது ஜேசி டுகார்ட் என்ற சிறுமி கலிபோர்னியாவில் கடத்தப்பட்டாள், இவள் 2009 வரை விடுவிக்கப்படவில்லை.

1996 – வடக்கு அயர்லாந்தில் சின் பெயின் பங்குபற்றாத நிலையில் அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.

1997 – கெமர் ரூச் தலைவர் போல் போட் வடக்குக்குத் தப்பியோட முன்னர், தனது பாதுகாப்புத் துறைத் தலைவர் சோன் சென், மற்றும் அவரது 10 குடும்ப உறுப்பினர்களையும் சுட்டுக் கொல்வதற்கு உத்தரவிட்டார்.

1998 – முல்லைத்தீவு, சுதந்திரபுரப் பகுதியில் இடம்பெற்ற வான் தாக்குதலில் 25க்கும் மேற்பட்ட தமிழர் கொல்லப்பட்டனர்.

1999 – கொசோவோவில் இருந்து சேர்பியப் படையினர் விலக எடுத்துக்கொண்ட முடிவை அடுத்து நேட்டோ தனது தாக்குதல்களை நிறுத்தியது.

2002 – இரண்டு மனிதர்களின் நரம்பு மண்டலங்களுக்கு இடையில் முதல் நேரடி மின்னணுத் தொடர்புப் பரிசோதனை ஐக்கிய இராச்சியத்தில் கெவின் வாரிக் என்பவரால் நடத்தப்பட்டது.

2003 – நாசாவின் இசுபிரிட் தளவுலவி செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.

2006 – ஈழத்தமிழர் படுகொலைகள், 2006: மன்னார், வங்காலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தமிழர் படுகொலை செய்யப்பட்டனர்.

2017 – உலக எக்ஸ்போ கண்காட்சி கசக்கஸ்தான், அஸ்தானா நகரில் ஆரம்பமானது.