• Fri. Jul 26th, 2024

கொரோனா 3-வது அலை அக்டோபர் மாதத்தில் வீசக்கூடும்

Jun 19, 2021

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் அதிகரித்த நிலையில், பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இதையடுத்து, இந்தியாவில் கொரோனா 3-வது அலை எப்படி இருக்கும் என்பது தொடர்பாக உலகெங்கிலும் உள்ள சிறந்த சுகாதார நிபுணர்கள், டாக்டர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர்கள் 40 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதில், இந்தியாவில் கொரோனா 3-வது அலை அக்டோபர் மாதத்தில் வீசக்கூடும் என பெரும்பாலானோர் கூறியுள்ளனர். சிலர் ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்தில் வரக்கூடும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், 2-வது அலையை விட 3-வது அலை மத்திய, மாநில அரசுகளால் திறம்பட கையாளப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துவிடும் என்பதால் இயற்கையாகவே பொதுமக்களிடத்தில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுவிடும் என தெரிவித்துள்ளனர்.

3-வது அலை, 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்பட்டு வருவதில் விஞ்ஞானிகள் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கொரோனா அச்சுறுத்தல் குறைந்தது ஓராண்டு நீடிக்கும் என 30 பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.