• Fri. Oct 18th, 2024

சென்னையில் வணிக வளாகங்களுக்கு அனுமதி

Aug 9, 2021

சென்னையில் கொரோனா காரணமாக வணிக வளாகங்கள், துணிக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்த நிலையில் மக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் வணிக வளாகங்கள், துணிக்கடைகள் உள்ளிட்ட பல பெருங்கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று முதல் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட 9 பகுதிகளில் வணிக வளாகங்கள், கடைகள் வழக்கம்போல செயல்படலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் நேரக்கட்டுப்பாடு, கொரோனா விதிகள் கடுமையாக பின்பற்றப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.