• Sat. Jul 27th, 2024

3வது அலையை சமாளிக்க பிரதமர் மோடி அதிரடி பிளான்

Jul 9, 2021

3வது அலையை சமாளிக்க நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன் ஆலைகளை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம் தற்போது முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் போது, பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவியதனால், ஆயிரக்கணக்கான உயிர் பலி ஏற்பட்டது.

இந்த நிலையில், விரைவில் 3வது அலை பரவ வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், ஆக்சிஜன் விநியோக உள்கட்டமைப்பு வசதியை வலுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆக்சி4ன் ஆலைகளை அமைக்க வேண்டும் என அவர் அதிகாரிகளுககு உத்தரவிட்டார்.

இதன்போது நாடு முழுவதும் பிரதமர் நல நிதி, பல்வேறு அமைச்சகங்களின் பங்களிப்பினால் 1500 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கும் பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.

மேலும் பிரதமர் நல நிதியின் மூலம் பயன்பாட்டுக்கு வரும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகளில், 4 லட்சம் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் விநியோகிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.