• Thu. Apr 18th, 2024

எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது

Feb 24, 2022

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது.

அந்த வகையில், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்கள் அனைவரும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் அனைவரும் நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுடைய 1 விசைப்படகையும் இலங்கை கடற்படை கைப்பற்றியது என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கச்சத்தீவு அருகே விசைப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மேலும் 13 தமிழக மீனவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

கைதான 22 மீனவர்களும் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.