• Fri. Oct 18th, 2024

goverment

  • Home
  • இருளில் மூழ்கியது இலங்கை

இருளில் மூழ்கியது இலங்கை

இலங்கையில் மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு மின்விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது. கொத்மலை மின்னுற்பத்தி நிலையம் முதல் பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் கோளாறு காரணமாக இவ்வாறு மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நெருக்கடி நிலை- உதய கம்மன்பில

அரசாங்கத்திற்கு ரூபா இல்லாததும், நாட்டுக்கு டொலர் கிடைக்காததும் நாடு எதிர்நோக்கும் நெருக்கடி என எரிசக்தி அமைச்சரான உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.வரவு- செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்…

தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்து!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற தென்னிந்திய மாநாட்டில் தமிழை ஆட்சி மொழியாவும் திருக்குறளை தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும் என தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள தாஜ் ஹோட்டலில் நேற்று 29வது தென் மண்டல…

தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம்!

தமிழகத்தில் பலத்த மழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் ரூபாய் நிவாரணம் நிதி வழங்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர்.…

இந்தியா – அரசு மருத்துவமனையில் தீ விபத்து 11 பேர் பலி

இந்தியாவின் மராட்டிய மாநிலம் அகமதுநகர் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியானார்கள் 12 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவசர சிகிச்சை பிரிவில் குறைந்தபட்சம் 20 நோயாளிகள் சிகிச்சை பெற்று வநதுள்ளனர்.இவர்கள்…

தீபாவளிக்கு மறுநாள் அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் (நவ.,05) அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று விழாவினை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாக, நவம்பர் 05 அன்று தமிழகம் முழுவதும் உள்ள…

தமிழ்நாட்டில் இன்று 1,039 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 1,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 593 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில்…

இலங்கையில் உதயமாகவுள்ள புதிய அரசியல்கூட்டணி

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் புதியதொரு அரசியல் கூட்டணி அமையவுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கான ஏற்பாடுகள் திரைமறைவில் இடம்பெற்று வருகின்றன எனவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஆளுங்கட்சியிலுள்ள முக்கிய சில அரசியல் பிரமுகர்கள் இணைந்தே இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்…

விரைவில் இருளில் மூழ்கும் இலங்கை!

எதிர்காலத்தில் அரசாங்கத்தால் டொலர்களை திரட்ட முடியாவிட்டால் மின்சார துண்டிப்பை தவிர்க்க முடியாததாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நாட்டில் இரண்டு மூன்று மாதங்களில் நிச்சயமாகப் பஞ்சம் ஏற்படும் என்றும் எரிபொருள் மற்றும் மின்சார…

ஒருவாரத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை; ரக்ஷ்யா அறிவிப்பு

ரஷியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. அந்நாட்டில் கொரோனா பாதிப்பிற்கு நேற்று ஒரேநாளில் புதிய உச்சமாக 1,015 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், ரஷியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா…